திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் ஒன்றியத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தடுக்கும் வகையில், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஆய்வுப் பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் துரை சந்திரசேகர் கேட்டறிந்தார்.
இதில் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் தங்கள் பகுதியில் பாதிப்புகளை குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் சட்டப்பேரவை உறுப்பினரிடம் எடுத்துரைத்தனர்.