திருவள்ளூர்: சுகாதாரத்துறை பணியாளர்களுடன் சமத்துவப் பொங்கல்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று திருவேற்காடு நகராட்சி ஆணையர் செந்தில் குமரன் புதுமையாக உரக்கிடங்கில் பணிபுரியும் சுகாதாரத்துறை பணியாளர்களுடன் சமத்துவப் பொங்கலை கொண்டாடினார். அங்கு அவர்கள் வாசலில் வண்ண கோலமிட்டு, அலங்கரிக்கப்பட்ட பானையில் அனைவரும் ஒன்றுகூடி பொங்கலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மேலும், திருவேற்காடு நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் உரக்கிடங்கு சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு புத்தாடை, கரும்பு ஆகியவற்றை வழங்கி பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்.
தூத்துக்குடியில் பொங்கலோ பொங்கல்!