திருவள்ளூர் ரயில் நிலையம் அருகேவுள்ள பெரியகுப்பம் பகுதியில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் ஊழியர் இன்று (ஜூன் 01) காலை வழக்கம்போல் கடையை திறக்கவந்தார். அப்போது கடையில் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் உள்ளே சென்ற பார்த்தபோது கடையில் இருந்த ஒரு லட்சத்து 20ஆயிரம் ரூபாய் திருடுபோகியிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர் இது குறித்து மாவட்ட மதுவிலக்கு அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திருடு போன இடத்திற்கு யாரும் வரவில்லை.