திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அடுத்த தாராச்சி பகுதியில் சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடை திறக்கப்படும். அந்நேரங்களில் பக்தர்கள் சிவ தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (செப். 09) வெள்ளிக்கிழமை வழக்கம் போல் சிவன் கோயிலில் பூசாரி பூஜை முடித்து கோவிலை பூட்டிக்கொண்டு சென்ற நிலையில் காலை திறப்பதற்காக கோவிலுக்கு வந்த பூசாரி கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கோயிலின் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதில், 10ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் சில்லறையாக இருந்த 40 ரூபாய் மட்டும் உண்டிலேயே வைத்துவிட்டு சென்றதும் தெரியவந்தது.