திருவள்ளூர்: திருத்தணி அருகே நல்லாட்டூர் கிராமத்தில் வசிப்பவர்கள் ஆறுமுகம் (55), தேசன் (62), இவரது மகன் பாக்கியம் (53). இவர்கள் மூவரும் கடைத்தெருவிற்கு பொருள்கள் வாங்குவதற்கு வந்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இளைஞர்களை ஓரமாய் போக சொல்லியுள்ளனர்.
அப்போது, தமிழ்ச்செல்வன் (23), அகிலன் (21), அஜய் (23), தமிழழகன் (21), தினகரன் (17) ஆகியோர் கஞ்சா போதையில் இருந்ததாகவும் இவர்கள் ஐந்து பேரும் இணைந்து ஆறுமுகம், பாக்கியம், தேசன் ஆகியோரை கடுமையாகத் தாக்கி, கத்தியால் குத்தியதாக, கூறப்படுகிறது.