தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அமர்ந்து செல்வோர் என இருவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. அதனை பொருட்படுத்தாமல் சிலர் தலைக்கவசம் அணியாமல் வலம் வருவது குறித்து நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், போக்குவரத்து காவல்துறையினர் ஆவடி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே தலைக்கவசம் அணியாமல் வந்த மகளிர் உட்பட சுமார் 380 நபர்களை மடக்கி பிடித்தனர்.