தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 15, 2020, 3:09 PM IST

ETV Bharat / state

சட்ட விரோதமாக குட்கா கடத்திய நபர் கைது!

திருவள்ளூர்: செங்குன்றம் ஒன்றியத்துக்குள்பட்ட புழல் அருகே மினி வேனில் கடத்தி வரப்பட்ட மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், வேன் ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

person-arrested-for-illegally-transporting-kutka
person-arrested-for-illegally-transportinperson-arrested-for-illegally-transporting-kutkag-kutka

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக நாளுக்கு நாள் நோயளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த மினி வேனை சோதனை செய்துள்ளனர். அப்போது, தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

சட்ட விரோதமாக குட்கா கடத்திய நபர் கைது

இதனையடுத்து வேன் ஓட்டுநர் சையத் வாஜித்தை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிபுள்ள குட்கா பொருள்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வாகனத்தைத் திருடியவர் அடித்துக் கொலை - 4 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details