திருவள்ளூர்அடுத்த தலக்காஞ்சேரி ஊராட்சியில் திரௌபதி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர், பிரபாகரன். இவர் பட்டியல் இனப்பெண்ணை திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவினை ஒட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் காப்புகட்டி தீ மிதித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த தீ மிதித்திருவிழாவில் பிரபாகரன் கடந்த 15 ஆண்டுகளாக கலந்துகொண்டு தீ மிதித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது திரௌபதி அம்மன் கோயில் தீ மிதித்திருவிழா நடைபெற உள்ள நிலையில் பிரபாகரன், அவரது சகோதரர் கார்த்திக் ஆகிய இருவரும் தீ மிதித்திருவிழாவில் கலந்துகொள்ள காப்புக்கட்டுவதற்கு கோயிலுக்குச் சென்றுள்ளனர்.