திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காரனோடையில் நாகவள்ளி என்பவரது இடத்தில் புதிய கடை கட்டுவதற்காக கடக்கால் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜேசிபி இயந்திரம் உதவியுடன் 4 தொழிலாளர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
வில்லாளன் என்ற தொழிலாளி உள்ளே இறங்கி பள்ளத்தில் இருந்து மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மேலிருந்து அவர் மீது மண், கல் சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த வில்லாளனை மீட்ட சக தொழிலாளர்கள் பாடியநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.