தமிழ்நாடு ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்றை மடக்கி சோதனையிட்டனர். அதில் பண்டல் பண்டலாக பணம், வெள்ளிக்கட்டிகள், வெள்ளி கொலுசுகள் இருந்தன.
உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் பணம், வெள்ளிக்கட்டிகள், வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அதைக் கொண்டு நான்கு பேரிடம் விசாரணை செய்ததில் அவர்கள் பெயர் அசோக், சதீஷ்குமார், ரஹ்மான், ஷேக் அன்சாரி என்பது மட்டும் தெரியவந்துள்ளது.