தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட வடமாநிலத்தவர்கள் - தமிழ் செய்திகள்

திருவள்ளூர், தென்காசி மாவட்டத்திலிருந்த வடமாநிலத்தவர்கள், அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வடமாநிலத்தவர்கள்
வடமாநிலத்தவர்கள்

By

Published : May 17, 2020, 1:02 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களை ரயில் மூலம் அனுப்பி வைக்க வட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முழு மருத்துவப் பரிசோதனை செய்து, பேருந்தில் ஏற்றி, சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இருந்த வடமாநிலத்தவர்கள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் சூழ்நிலை உருவான காரணத்தால், நடைப்பயணமாகவும், மிதிவண்டிகள் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் செல்ல ஆரம்பித்தனர்.

இதன்காரணமாக தமிழ்நாட்டில் இருக்கும் வெளிமாநில மக்கள், அவரவர் சொந்த ஊருக்குச் செல்ல அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டது.

வடமாநிலத்தவர்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த 31 வடமாநிலத்தவர்களை மத்தியப்பிரதேசம் அனுப்பி வைக்க, திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து, அவர்களுக்கு முழு மருத்துவப் பரிசோதனை செய்து, அதற்கான சான்றிதழ்களை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

தென்காசி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த வெளிமாநிலத்தொழிலாளர்கள் 264 பேர்களின் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். இந்தப் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதல் கட்டமாக சொந்த ஊர் செல்வதற்காக 264 பேரும் திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ரயில் மூலம் திருநெல்வேலியிலிருந்து சொந்த ஊருக்குச் செல்கிறார்கள்.

வடமாநிலத்தவர்கள்

இதையும் படிங்க: உத்தரப் பிரதேசம் செல்ல முயன்ற 40 தொழிலாளர்கள் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details