திருவள்ளூர் மாவட்டம் அரும்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் மனைவி அஞ்சலி என்பவரிடம் நிலத்தை வாங்க ரூ.8,82,000 விலை பேசியுள்ளார்.
மேலும் இதன் முதற்கட்டமாக 5 லட்சம் ரூபாயையும் , அடுத்த கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 3,82,000 ரூபாயையும் கொடுத்துள்ளார். ஆனால் ஏழுமலையிடம் நிலத்தை விற்பதாக சொல்லி பணத்தை வாங்கிய அஞ்சலி, பத்திரப்பதிவு செய்ய வராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதனால் தொடர்ந்து வற்புறுத்தியதையடுத்து, வாங்கிய பணத்தில் ரூ.3,82,000 கொடுத்துள்ளனர். ஆனால் மீதமுள்ள 5 லட்சம் ரூபாய தராமலே வந்துள்ளனர். பணம் கொடுத்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும், பணம் வராதது குறித்து அஞ்சலியிடம், ஏழுமலை கேட்டுள்ளார்.
அதற்கு பணத்தை வாங்கவே இல்லை என்றும், எனது 3 மகன்களும் போலீஸில் இருப்பதால் உன்னால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றும் பகிரங்கமாக மிரட்டியுள்ளார். இதில் அஞ்சலியின் மகன்களான நரேஷ் திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்திலும், சுரேஷ் ஆவடி மாநகர காவல் அலுவலகத்திலும், கார்த்திக் புழல் மத்திய சிறை பிரிவிலும் வேலை செய்து வருகின்றனர்.
இதனிடையே விவசாயி ஏழுமலை, ஊராட்சி மன்றத் தலைவரான ஏ.ஆர்.வெற்றிவேலை அணுகியுள்ளார். இதனையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் என்ற முறையில் அஞ்சலியிடம் விசாரித்துள்ளார். அப்போது ஊராட்சி மன்றத் தலைவரை தகாத வார்த்தைகளால் அஞ்சலி பேசியுள்ளார்.