தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனம் சார்பில் கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் ஆட்சியரிடம் வழங்கல் - Triuvallur district news

திருவள்ளூர்: முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனம் சார்பில் கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டன.

முத்து பின்கார்ப் நிறுவனம் கரோனா உபகரணங்கள் வழங்கல்
முத்து பின்கார்ப் நிறுவனம் கரோனா உபகரணங்கள் வழங்கல்

By

Published : Jun 4, 2021, 10:51 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கிவரும் முத்தூட் ஃபின்கார்ப் சார்பில் மாவட்டத்தின் கரோனா தொற்று பாதிப்பை தடுக்க பணிகளை மேற்கொள்ளும் காவல் துறையினர் அரசு அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களை கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் விதமாக சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள முகக் கவசம் மற்றும் பேஸ் சீல்டு ஆகியவற்றை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம், முத்தூட் ஃபின்கார்ப் திருவள்ளூர் பகுதி மேலாளர் கந்தசாமி, திருவள்ளூர் கிளை மேலாளர் லிவிங்ஸ்டன் சார்லஸ் மற்றும் மணவாளநகர் கிளை மேலாளர் சிவா ஆகியோர் வழங்கினர்.
பின்னர் முத்தூட் ஃபின்கார்ப் பகுதி மேலாளர் கூறுகையில், “மருத்துவர்கள் மற்றும் கரோனா நோயாளிகளுக்கு ஏற்கனவே சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான முகக் கவசம் கிருமிநாசினி ஃபேஸ் சீல்டு உள்ளிட்டவை முத்தூட் ஃபின்கார்ப் திருவள்ளூர் பகுதி சார்பாக வழங்கப்பட்டுள்ளது. முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்தால் முடிந்த உதவிகளை மாவட்டத்தின் முன் களப் பணியாளர்களுக்கு செய்ய உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details