தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 50பயனாளிகளுக்கு நிதியுதவி! - mla palaraman give amount to Housing beneficiaries under the Pradhan Mantri Awas Yojana

திருவள்ளூர்: பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 50பயனாளிகள் வீடுகட்டுவதற்கான நிதியை இன்று பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன் வழங்கினார்.

mla palaraman give amount to Housing beneficiaries under the Pradhan Mantri Awas Yojana

By

Published : Nov 7, 2019, 11:40 PM IST

குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மூலம் வீடு கட்டிக்கொடுக்கப்படுகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் சோம்பட்டு கிராமத்தில், குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் மூலம் குடிசை வீடுகளில் வசிக்கும் 50 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு இன்று, காங்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு தலா 2லட்சத்து பத்தாயிரம் ரூபாய் நிதி உதவியை பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன் மற்றும் குடிசைமாற்று வாரிய அலுவலர்கள் வழங்கினார்.

குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகட்ட நிதியுதவி வழங்கிய பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர்

இதனைத்தொடர்ந்து பேசிய எம்எல்ஏ பலராமன், பொன்னேரி சட்டப்பேரவைக் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 800 பயனாளிகளை தேர்ந்தெடுத்து குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டித்தர நிதி உதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:சேப்பாக்கம் மைதான ஒப்பந்தத்தை புதுப்பிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

ABOUT THE AUTHOR

...view details