திருவள்ளூர்:திருத்தணி அருகே வீரகநல்லூர் ஊராட்சியில் வசித்து வரும் இருளர் இன மக்கள், தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கவும், தங்கள் பகுதி குழந்தைகள் கல்வி கற்க ஏதுவாகவும் இனச் சான்று வழங்க வேண்டியும் வருவாய்த் துறை அலுவலர்களை பலமுறை சந்தித்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் 45 குடும்பங்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஷ், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் இருளர் குடியிருப்பு பகுதிக்கு சென்று இலவச வீட்டு மனை பட்டா வழங்கினர்.