சென்னை மதுரவாயலில் அதிமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர் பென்ஜமின், அதிமுக அரசின் பல்வேறு நல திட்டங்களை பட்டியலிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "உலக முதலீட்டாளர்கள் இரண்டாவது மாநாட்டில் மூன்று லட்சத்து 341 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் சிறு, குறு தொழில்களில் 32 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் அதிகப்படியான முதலீடுகளை ஈர்த்துவருவார்.