திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு அரசு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி, பொன்னேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினரான பலராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயிரத்து 137 பயனாளிகளுக்கு ரூபாய் 4 கோடி மதிப்பிலான தாலிக்குத் தங்கம், காசோலைகள் வழங்கப்பட்டன.
இதனை பெறுவதற்காக சோழவரம், மீஞ்சூர், திருவொற்றியூர், புழல், மாதவரம், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பயனாளிகள் வந்தனர்.
அலுவலர்களின் அறிவுறுத்தலின்படி காலை 10 மணிக்கே பயனாளிகள் மண்டபத்தில் குவிந்தனர். ஆனால் மண்டபத்தில் மதியம் 2 மணிக்கு மேலே நிகழ்ச்சிகள் நடந்தன.