தமிழ்நாடு

tamil nadu

திருவள்ளூரில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது

By

Published : Jul 3, 2020, 11:42 AM IST

திருவள்ளூர் : திருவள்ளூரில், கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைதுசெய்யப்பட்டார்.

Man arrested with illicit liquor at Thiruvallur
Man arrested with illicit liquor at Thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் குன்னவளம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின்பேரில், திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி கல்பனா தத் தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு அடுப்பு பானைகள், மூலப்பொருள்கள் ஆகியவற்றை வைத்து சிலர் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தனர். அவர்கள், காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தெறித்து தப்பி ஓடினார்கள். ஒருவர் மட்டுமே காவல்துறையினரிடம் சிக்கினார்.

இதையடுத்து, சாராய ஊறல், உபகரணங்களை காவல்துறையினர் அழித்தனர். பின்னர் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 1 கோடி விதைப் பந்துகள் செய்வதுதான் இலக்கு’- வியக்க வைக்கும் சிறுவன் மேகன்!

ABOUT THE AUTHOR

...view details