தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 23, 2020, 3:14 PM IST

ETV Bharat / state

கும்மிடிப்பூண்டியில் கஞ்சா விற்றவர் கைது

திருவள்ளூர்: இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்தவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்த இரண்டு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

cannabis seller
Man arrested for selling cannabis

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சாமி ரெட்டி கண்டிகை பகுதியில் சமூக விரோதிகள் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக, கும்மிடிப்பூண்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், அப்பகுதியில் அதிரடி ஆய்வு செய்த கும்மிடிப்பூண்டி காவல்துறையினர், சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த நபரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, பையில் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் சீனிவாசன் என்ற அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பேருந்தை திருடிச் சென்ற நபர்; விரட்டிப் பிடித்த போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details