தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது - மீஞ்சூர் தோட்டக்காடு

திருவள்ளூர்: பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கிழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேதாஜி
நேதாஜி

By

Published : May 2, 2020, 9:23 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நேதாஜி (24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவியின் செயலில், அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்கள், அப்பெண்னை அழைத்து விசாரித்தபோது நடந்தவற்றைக் கூறி கதறி அழுதுள்ளார்.

இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் நேதாஜி மீது பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் நேதாஜியை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:'தடையை மீறினால் குற்றவியல் தண்டனை பாயும்'

ABOUT THE AUTHOR

...view details