தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமித்ஷா கூறிய கருத்தை எதிர்கட்சிகள் தவறாக புரிந்து கொண்டனர்-மாபா பாண்டியராஜன்

திருவள்ளூர்: அமித்ஷா இந்தி மொழியை திணிப்பேன் என்றோ சட்டம் போடுவேன் என்றோ தெரிவிக்கவில்லை அவரது கருத்தை எதிர்கட்சிகள் தவறுதலாக புரிந்துகொண்டு பேசுகின்றனர் என அதிமுக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ma pa pandiyarajan explanation for Amit Shah statement about one nation one language

By

Published : Sep 18, 2019, 12:54 PM IST

திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் கிராமத்தில் அண்ணாவின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுகூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொழில்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்துகொண்டார்.நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "அமித்ஷா வின் கருத்துகளை எதிர்கட்சிகள் தவறுதலாக புரிந்து கொண்டு பேசுகின்றனர்.

இந்தி தினத்தில் அவர் பேசும் போது, 'இந்தியாவின் முகமாக ஒரு மொழி இருக்க முடியும் என்றால் அது இந்தியாகத்தான் இருக்கமுடியும்' என்று தெரிவித்தார். ஆனால் அவர் சட்டம் போடுவேன் என்றோ மொழியை திணிப்பேன் என்றோ கூறவில்லை. தமிழால் வளர்ந்த திமுக கட்சி ஆட்சியில் இருக்கும் போது எத்தனை அகழாய்வுகள் நடைபெற்றது.ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை கூட திமுக ஆட்சியில் சமர்ப்பிக்கவில்லை.

மாபா பாண்டியராஜன் பேட்டி

தமிழ் வளர்ச்சித்துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு வசதிகளை செய்துகொடுத்துள்ளார்.இலக்கியமும்,கலைப்பண்பாடும் அதிமுக ஆட்சியில் பொற்காலத்தை கண்டுகொண்டிருக்கிறது."என்றார்.

இதையும் படிங்க: கீழடி அகழாய்விற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் பாண்டியராஜன்!

ABOUT THE AUTHOR

...view details