தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பாக நடைபெறுகிறது' - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் - உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு பாதுகாப்பான முறையில் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்

திருவள்ளூர்: உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு பாதுகாப்பான முறையில் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

local body election are held safely, says thiruvallur collector maheshwari ravikumar
local body election are held safely, says thiruvallur collector maheshwari ravikumar

By

Published : Dec 27, 2019, 12:48 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. 8 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் உள்ள 3,919 உள்ளாட்சிப் பதவிகளில் 2,162 பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு செலுத்த வரும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்டோருக்கான அடிப்படை வசதிகள் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்

இதில் 303 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2,400 காவலர்களைக் கொண்டு பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலைக் கண்காணிக்க 136 கேமராக்களும், 116 சிசிடிவி கேமராக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்த அவர், 56 பார்வையாளர்களைக் கொண்டு வாக்குப்பதிவு மிகவும் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நடைபெறுவதாக கூறினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு சிறப்பான முறையிலும், அமைதியான முறையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாக்கு மையத்தைப் பூட்டிய அதிமுக முன்னாள் கவுன்சிலர்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details