திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் முக்கரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆங்காடு கிராமத்தில் நாற்று நடும் பணிகளுக்காக சரக்கு வாகனத்தில் நேற்று (ஜூன் 25) சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலையில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்கள் சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
வாகனத்தில் 20-க்கும் மேற்பட்டோர் இருந்ததை அறிந்த காவல் துறையினர் தகுந்த இடைவெளியின்றி அவர்களைப் பணிக்குச் செல்லக்கூடாது என அறிவுறுத்தினர். அதையடுத்து அப்பெண்கள் அனைவரும் விவசாய பணிகளுக்கு தடை ஏதும் இல்லை என முதலமைச்சர் அறிவித்திருப்பதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து காவல் துறையினர் பாதுகாப்பாகப் பணி செய்யும்படி அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தனர்.