திருவள்ளூர்: ஆற்காடு குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (56). இவர் தனக்கு சொந்தமான 30 ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது ஆட்டோவில் வந்த பெண் உட்பட இரண்டு ஆண்கள், முதியவர் இடத்தில் எங்களுக்கு நான்கு ஆடுகள் விலைக்கு வேண்டும் என கேட்டுள்ளனர்.
அதனை ஒப்புக்கொண்டு நான்கு ஆடுகளின் விலை 68 ஆயிரம் ரூபாய் என்றார். அதற்கு அவர்கள் இரண்டாயிரம் குறைத்துக்கொண்டு 66 ஆயிரத்துக்கு நான்கு ஆடுகளை வாங்கிக்கொள்கிறோம் என கூறி 33 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை முதியவரிடத்தில் வழங்கிவிட்டு ஆடுகளை ஏற்றி சென்றுவிட்டனர்.