தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களை தேடி சென்று மருத்துவ சேவை அளிக்கும் வகையில், 'அம்மா மினி கிளினிக்' கொண்டுவரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மொத்தம் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. தற்போது அம்மா மினி கிளினிக் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் 53 அம்மா மினி கிளினிக்குகளில் முதல் கட்டமாக 18 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.