வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த சீனிவாசன்(40) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (32) என்ற பெண்ணும் திருவள்ளூர், மப்பேடு அருகே கட்டடப் பணி செய்துவருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 7ஆண்டுகளாக பழகிவருகின்றனர்.
இந்நிலையில், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி நேற்று இரவும் ஏற்பட்ட தகராறில், வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த சீனிவாசன் ஆத்திரத்தில் திடீரென மகாலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.