திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மம்தா பானர்ஜி போல உடையணிந்த நர்மதா என்ற பெண், அங்கிருந்த காந்தி சிலையை டெட்டால் ஊற்றி சுத்தம் செய்தார். அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை ஆய்வாளர் மகேஸ்வரி, நர்மதாவை கைது செய்து அழைத்துச் சென்றனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இவ்வாறு செயல்படக்கூடாது என்று அவரை எச்சரித்தின்னர்.
தனது நூதன போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நர்மதா, "குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக வடமாநிலங்களில் நிகழ்ந்துவரும் வன்முறை வெறியாட்டங்களால் பொது சொத்துக்கள் பெரும் சேதமடைந்ததுள்ளன. இதைத் தடுக்க வேண்டிய முக்கிய அரசியல் கட்சியினர் போராட்டத்தை தூண்டும் விதமாக பேசிவருவகின்றனர்.