தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த் தேக்கம் ஆய்வு - dam inspection

திருவள்ளூர்: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த் தேக்கத்தை அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் சென்று ஆய்வு செய்தார்.

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த் தேக்கம் ஆய்வு

By

Published : Sep 24, 2019, 6:17 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த் தேக்கத்தை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் ஆய்வு செய்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த ஆண்டு ஆந்திராவில் இருந்து எட்டு டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை கேட்டுப்பெற உள்ளதாகவும் கிருஷ்ணா நதி நீர் கால்வாய் சீரமைக்கும் பணியை 23 லட்சம் ரூபாய் செலவில் செப்பணிட உள்ளதாகவும், கனமழை காரணமாக ஒரே நாளில் பூண்டி நீர்தேக்கத்திற்கு 327 மில்லியன் கன அடி நீர் வந்ததாகவும் தெரிவித்தார்

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த் தேக்கம் ஆய்வு

பின் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மதகுகள் அனைத்தும் வலுவாக உள்ளதாகவும், பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பூண்டி நீர்த்தேக்கத்தின் கால்வாய்கள் அனைத்தும் சீரான முறையில் பராமரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details