தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன், மனைவி!

திருவள்ளூர்: செங்குன்றத்தில் குடும்ப பிரச்னையால் கணவன், மனைவி இருவரும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

suicide

By

Published : Jun 28, 2019, 11:15 PM IST

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் ஜிஎன்டி சாலை அருகே சாமியார் மடம் என்ற பகுதியில் வசித்து வருபவர் மதன்(38), இவர் டாட்டா ஏசி வாகனத்தை வாடகைக்கு கொடுத்து தொழில் செய்து வருகிறார். அவருடைய மனைவி கௌசல்யா(35). இவர்களுக்கு வெற்றிமாறம்(9), பிரவீனா(7) என்ற குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், மதனுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை வருவதும் பின் சமாதானமாவதும் வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது. இந்நிலையில், இன்று கணவன் மனைவி இருவருக்கும் பிரச்னை அதிகமாகி வாக்குவாதம் வரை சென்று, பின் கௌசல்யா மன வேதனையில் புடவையினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனை கண்ட மதனும் அதே புடவையில் தூக்கிட்டுக் கொண்டுள்ளார். அச்சமயம் அவர்களது குழந்தைகள் பள்ளியில் இருந்து வர, வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டிய நிலையில் இருக்கவும், அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ஜன்னலின் வழியாக எட்டி பார்த்ததில் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

உடனடியாக செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன்-மனைவி இருவரும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தினால் அவர்களது குழந்தைகள் பெற்றோர்களின்றி தவித்தது அப்பகுதியில் உள்ளோரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

தூக்கிட்டு தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details