பூந்தமல்லி அடுத்த சம்பத் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன்(48). இவருக்கு சொந்தமான பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டுவதற்காக அந்த வீட்டை இடிக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணியில் அகரமேல், எம்.ஜி.ஆர். சாலையைச் சேர்ந்த ரவி(48) என்பவர் ஈடுபட்டிருந்தார். வீட்டின் சுவர்களில் ஒவ்வொரு பகுதியாக இடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து ரவி மேல் விழுந்ததில் ரவி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.