திருவள்ளூர் அடுத்த குத்தம்பாக்கம் பகுதியில் ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களை பத்திரமாக எடுத்துச் செல்லும் வகையில் மரக்கட்டையால் பேக்கிங் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 2 மணியளவில் அந்த தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது பணியிலிருந்த தொழிலாளர்கள் உடனடியாக தொழிற்சாலையை விட்டு வெளியேறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீ கொளுந்துவிட்டு வானுயர எரிந்ததால் தீயை அணைக்கும் முயற்சியில் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, மறைமலைநகர், திருவள்ளூர் , திருவூர் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.