தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 17, 2019, 12:22 PM IST

ETV Bharat / state

கடைசி நாளில் விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்புமனு தாக்கல்!

திருவள்ளூர்: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

local body election nomination in thiruvallu
local body election nomination in thiruvallu

தமிழ்நாட்டில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திருவள்ளூர், கடம்பத்தூர், பூண்டி, எல்லாபுரம் உள்ளிட்ட 14 ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாளான நேற்று ஊராட்சித் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளில் போட்டியிட திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்புமனு தாக்கல் பிற்பகலில் மந்தமானது. மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக சார்பில் முன்னாள் சேர்மன் சரஸ்வதி சந்திரசேகர் தனது கைக்குழந்தையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்ய குவிந்த கட்சியினர்

வேட்புமனு தாக்கல் செய்ய வந்த காங்கிரஸ் வேட்பாளர் சசிகுமார் கூறுகையில், ”கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் மக்களை நம்பி வெங்கத்தூர் ஊராட்சி 21ஆவது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். நான் வெற்றி பெற்றால், மக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவேன்” என்றார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details