திருவள்ளூர்:திருவேற்காட்டில் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் மணி (70). இவருக்கு கோபாலகிருஷ்ணன், மோகன், குணசேகரன் என மூன்று மகன்கள் உள்ளனர். மூன்று பேருக்கும் தந்தை மணி திருமணம் செய்து வைத்ததோடு, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வீடு கட்டியும் கொடுத்து வாழ வைத்துள்ளார்.
தந்தையை மிரட்டிய மகன்கள்
இந்நிலையில், வீட்டில் சிறப்பாக பார்த்துக் கொள்வதாகக்கூறி முதியவர் மணியின் ஓய்வூதியத்தை வாங்கி மூன்று மகன்களும் செலவழித்ததோடு, அவரது சேமிப்பு பணத்தையும் பிடுங்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், முதியவருக்கு சொந்தமான நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தையும், கொலை செய்து விடுவதாக மிரட்டி கையெழுத்து பெற்று அபகரித்துள்ளனர்.
ஆட்சியரிடம் முதியவர் மனு
தொடர்ந்து, மகன்கள் மூவரும் சேர்ந்து தந்தையை வீட்டிலேயே கட்டிப்போட்டு, சரமாரியாக தாக்கியும் வீட்டை விட்டு வெளியே செல்லாதவாறு துன்புறுத்தியும் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கிருந்து தப்பி வெளியே வந்த மணி, கோயில், குளம் எனத் தங்கி தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.