தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முப்போகம் விளையும் நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு - Farmers protest To acquire lands Near Periyapalayam

பெரியபாளையம் அருகே புதிய 6 வழி சாலைக்காக அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். முப்போகம் விளையும் நிலங்களை சாலைக்கு கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விவசாயிகள் எதிர்ப்பு
விவசாயிகள் எதிர்ப்பு

By

Published : Jun 14, 2022, 3:10 PM IST

திருவள்ளூர்: தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 126.5 கி.மீ தூரத்திற்கு 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகங்களை சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க ஏற்கனவே மற்றொரு சாலை அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், இந்த துறைமுகங்களை ஆந்திர மாநிலத்துடன் இணைப்பதற்காக சுமார் 3,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தச்சூர் - சித்தூர் 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

விவசாய நிலங்களை கையகப்படுத்த ஏற்கனவே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரியபாளையம் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் சாலைக்காக விளை நிலங்களை அளவீடு செய்வதற்காக அதிகாரிகள் இன்று வந்தனர்.

விவசாயிகள் எதிர்ப்பு

உரிய இழப்பீடு ஏதும் வழங்கப்படாமல் முப்போகம் விளையும் நிலங்களை அளவீடு செய்ய கூடாது என விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களது வாழ்வாதாரமாக விளங்கும் விளை நிலங்களை சாலைக்காக கொடுத்து விட்டால் வேறு எந்த வேலையும் தெரியாத விவசாயிகள் எப்படி பிழைப்பது என கேள்வி எழுப்பினர்.

வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடனும் விவசாயிகள் அளவீட்டு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சாலை அளவீட்டு பணிகளை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் விளை நிலத்தை கையகடுத்துவதை தவிர்த்து மாற்று வழியில் சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க:அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details