மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த மின்சார திருத்த சட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விவசாய சங்கங்களின் மாநில தலைவர் மணிகண்டன் தலைமையில், பத்துக்கும் மேற்பட்ட விவசாய சங்க நிர்வாகிகள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்கள்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மணிகண்டன், ”புலவர் பெருந்தகை நாராயணசாமி தலைமையிலான போராட்டத்தில் 63 பேரை பலி கொடுத்துப் பெற்ற இலவச மின்சாரத்தை மின்சார திருத்த சட்ட மசோதா 2020ஐ கொண்டு மத்திய அரசு பறிக்கிறது. மேலும் ஒரு குதிரைத்திறன் பயன்பாடு கொண்ட மோட்டார் வைத்து ரூ. 20000 வைப்புத் தொகையாக கட்ட வேண்டும் என விவசாயிகளை நிர்ப்பந்திக்கிறது.