திருவள்ளூர்:திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடு குப்பம் ஊராட்சியில் 37 ஏக்கர் பரப்பளவில் குப்பம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் சுமார் 10 ஏக்கர் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்து பயிர் செய்து வருவதாக தெரிகிறது.
இது குறித்து ஆற்காடு குப்பம் விவசாயிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொடர் கோரிக்கை வைத்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. பின்னர் அங்கு திருவாலங்காடு ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில், இது ஏரி பகுதி இதனை ஆக்கிரமித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.