திருவள்ளூர் மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாகவும், ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.
நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய திமுக - நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய திமுக
திருவள்ளூர்: நிவர் புயல் மற்றும் ஆரணி ஆற்று வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு திமுக சார்பில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது.

DMK provides relief item
இதில் மாவட்ட பொறுப்பாளர் டி ஜே கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர் ரமேஷ்ராஜா உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டு காணியம்பாக்கம், ஏ.ரெட்டிபாளையம், கடப்பாக்கம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களும் போர்வைகளும் வழங்கினர்.
இதையும் படிங்க: ஆகாயத்தாமரையால் உபரி நீரை நிறுத்த முடியாமல் அலுவலர்கள் திணறல்!