தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில் மேம்பாலங்கள் முடிக்கப்படாமல் இருப்பதை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்! - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

திருவள்ளூர்: ரயில் மேம்பாலங்கள் முடிக்கப்படாமல் இருப்பதை கண்டித்து மத்திய மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக ஆர்ப்பாட்டம்
திமுக ஆர்ப்பாட்டம்

By

Published : Feb 13, 2021, 8:53 AM IST

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, புட்லூர் ஆகிய இடங்களில் ரயில் மேம்பாலங்கள் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. இதனைக் கண்டித்து திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனை திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் ஏற்பாடு செய்தார். இதில் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சாமு நாசர், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சாமு நாசர் பேசுகையில், "திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட ரயில்வே மேம்பாலம் திட்டம் பத்து வருடங்களாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உடல் நிலை சரியில்லாத நேரங்களில் மருத்துவமனைக்கு செல்வதில் ஆம்புலன்ஸ் காலதாமதம் ஏற்படுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

முன்னாள் அமைச்சர் ரமணா ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு, இந்தப் பணிகளை தடுத்து நிறுத்தினார்" என்றார்.

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details