குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பாரதியார் நகர் பிரதான சாலைப் பகுதியில் நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து சென்ற நபரை அடையாளம் தெரியாத கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அவர்களிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து அந்த நபர் ஓடியுள்ளார். கும்பல் விடாமல் விரட்டிச் சென்று அந்த நபரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
இது குறித்து குன்றத்தூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன், உதவி ஆணையர் சம்பத், காவல் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் சம்பவயிடத்துக்கு விரைந்துவந்து கொலைசெய்யப்பட்டு கிடந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் குன்றத்தூர் அடுத்த கெலட்டிப்பேட்டையைச் சேர்ந்த போகபதி பாபு என்பதும் கடந்த ஆண்டு அதேப் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரான கிரிராஜன் குடும்பத்தினருடன் இவருக்கு முன்விரோதம் இருந்துவந்தது. மகளின் சீமந்தம் குறித்து பேச வேண்டுமென கிரிராஜனை வரவழைத்த போகபதி பாபு, அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார்.