தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி போடும் முகாம் கடந்த 16ஆம் தேதிமுதல் நடைபெற்றுவருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்டமாக நேற்று (பிப். 3) வருவாய்த் துறை, காவல் துறையைச் சார்ந்தவர்களுக்குத் தடுப்பூசி போடும் முகாம் தொடங்கியது.
திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துச்சாமி ஆகியோர் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர்.