திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் கடந்த ஆண்டு 38 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பகுதி விவசாயிகள் தங்களது கால்நடைகளை பராமரிக்கவும் பாசனத்திற்காகவும் இந்த ஏரி நீரை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சமூக விரோதிகள் சிலர் தாங்கள் ஏற்கனவே ஏரியை ஏலம் எடுத்திருப்பதாக கூறி, பொதுப்பணித்துறையினரின் பராமரிப்பில் உள்ள இந்த ஏரியில் மீன் பிடிப்பதற்காக, சட்டவிரோதமாக மின் மோட்டார் மூலம் ஏரி நீரை வெளியேறியதாக கூறப்படுகிறது.