தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 21, 2022, 9:49 PM IST

ETV Bharat / state

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை.. பூண்டி நீர்த்தேக்கத்தின் உயரம் அதிகரிப்பு?! - ஆய்வு செய்த பொறியாளர்கள்!

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்காக 1.5 டிஎம்சி கூடுதல் நீரைச்சேமிக்கும் வகையில் உயரத்தை அதிகரிக்கவும், கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை.. பூண்டி நீர்த்தேக்கத்தின் உயரம் அதிகரிப்பு - ஆய்வு செய்த பொறியாளர்கள்!
கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை.. பூண்டி நீர்த்தேக்கத்தின் உயரம் அதிகரிப்பு - ஆய்வு செய்த பொறியாளர்கள்!

திருவள்ளூர்மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அதன் மொத்த உயரமான 35 அடியில், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவினைக்கொண்டது. இந்த நீர்த்தேக்கத்தில் சென்னை மக்களின் குடிநீர் தேவையைக்கருத்தில்கொண்டு, கூடுதலாக 1.5 டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் வகையில் அதன் உயரத்தை அதிகரிக்க உலக வங்கியின் ஆலோசகர் சூப்பே குழுவினருடன் நீர்வளத்துறைப்பொறியாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

மேலும் அணையின் பாதுகாப்பு அணையில் இருந்து தண்ணீரை புழல், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு அனுப்பும் முறைகள் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் நீர்வரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் நீர்வளத்துறை தலைமைப்பொறியாளர் முரளிதரன் உள்ளிட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பூண்டி நீர்த்தேக்கம்

பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளை பாலாறு வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் முத்தையா, திருவள்ளூர் உதவி செயற்பொறியாளர் சத்திய நாராயணா, கொசஸ்தலை வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் பொதுப்பணி திலகம் உள்ளிட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை.. பூண்டி நீர்த்தேக்கத்தின் உயரம் அதிகரிப்பு - ஆய்வு செய்த பொறியாளர்கள்!

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் முரளிதரன், “கொசஸ்தலை கூவம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவதற்கும், பூண்டி நீர்த்தேக்கத்தின் உயரத்தை பொதுமக்களுக்கு பாதிப்பின்றி அதிகரிக்கவும் உலக வங்கி நிதி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சுற்றுலாத்துறை சார்பில் படகு போக்குவரத்து தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சத்திரம் பகுதியில் 2015ஆம் ஆண்டு பெய்த கனமழையில் உடைந்த தடுப்பணை, புதிதாக கட்டப்பட்ட பின் தற்போது அதன் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு செய்தோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:முழுக் கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையின் ரம்மியமான புகைப்படத்தொகுப்பு!

ABOUT THE AUTHOR

...view details