தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் கடலோர பழங்குடி மக்களுக்கு நண்டு மற்றும் கோழிப்பண்ணைகள் - திருவள்ளூர் அருகே புதிய நண்டு

திருவள்ளூர் மாவட்டத்தில் சிபா - எஸ்டி பழங்குடி மக்கள் நலத்திட்டத்தின் கீழ் கடலோர பழங்குடி மக்களுக்கு நண்டு மற்றும் கோழிப்பண்ணைகள் அமைத்து தரப்பட்டுள்ளன.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 2, 2022, 11:02 AM IST

திருவள்ளூர் மாவட்டம்காட்டூரில் உள்ள இருளர் பழங்குடி மகளிர்களுக்குசிபா - எஸ்டி பழங்குடி மக்கள் நலத்திட்டத்தின் கீழ் உவர் நீர் மீன் தொழில்நுட்பங்களோடு, இன்று (அக்.2) நண்டு மற்றும் கோழிப்பண்ணைகள் அமைத்து தரப்பட்டுள்ளன. இந்த பண்ணைகள் மத்திய உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலைய அலுவலர்கள் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, இறால்கள் மற்றும் மீன்கள் விடும் நிகழ்ச்சியும், கோழிப்பண்ணைகளில் கோழிகள் விடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிபா திட்டத்தில் காட்டூர் இருளர் பழங்குடி மகளிர்களை தேர்ந்தெடுத்து ஒரு குழு அமைத்து, அந்த குழுவிற்கு சிந்தாமணி ஈஸ்வரர் மகளிர் குழு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது

இருளர் பழங்குடியினருக்கு பழக்கமான தொழில் என்பதால் இந்த பண்ணைகள் மூலம் வேலைவாய்ப்பு, சுய வருமானம், வங்கியில் சேமிப்பு, குடும்பம் மற்றும் சமுதாய முன்னேற்றங்கள் மற்றும் வாழ்வாதார வழிகளும் கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்த விழாவில் சிபா திட்டத்தின் தலைவியும் மூத்த விஞ்ஞானியுமான சாந்தி தலைமை வகித்தார். இத்திட்டத்தில் முன்னதாக விற்பனையான தொகைக்கான காசோலைகளை மூத்த விஞ்ஞானிகள் சி.வி.சாய்ராம், டி.செந்தில் முருகன், பி.மகாலட்சுமி பழங்குடியின மக்களிடம் வழங்கினர்.

இதேபோன்று, பழவேற்காடு ஊராட்சி குளத்து மேட்டில் புதிய மாடி தோட்டமும் நண்டு அறுவடையும் நடைபெற்றது. கோட்டைக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட தோணிரேவு கிராமத்தில் நண்டு விற்பனைக்கான தொகை வழங்கும் நிகழ்ச்சியும் மாடித்தோட்டமும், கோழி வளர்ப்பு பண்ணையும் தொடங்கப்பட்டது.

திருவள்ளூர் அருகே புதிய நண்டு மற்றும் கோழிப்பண்ணைகள் திறப்பு

இதையும் படிங்க: 'நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது' - முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details