தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 6, 2020, 10:11 PM IST

ETV Bharat / state

திருவள்ளூரில் சதத்தை நெருங்கும் கரோனா!

திருவள்ளூர்: கரோனா தீநுண்மி பெருந்தொற்றின் பாதிப்பு திருவள்ளூர் மாவட்டத்தில் சதத்தின் அருகில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் நிலவிவருகிறது.

திருவள்ளூரில் சதத்தை நெருங்கும் கரோனா
திருவள்ளூரில் சதத்தை நெருங்கும் கரோனா

இம்மாவட்டத்தில் கரோனா தீநுண்மி பரவல் கடந்த வாரம்வரை 24 பேராக இருந்துவந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொற்று பரவல் அதிகரித்துவருகிறது.

கடந்த மார்ச் மாதம் முதல் இன்றுவரை தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 95 நபர்கள். குறிப்பாக நேற்று (மே 5ஆம் தேதி) மட்டும் 18 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் புழல் ஒன்றியத்தில் இரண்டு பேர், கும்மிடிப்பூண்டி பகுதியில் இரண்டு பேர், திருவள்ளூர் ஒன்றியத்தில் ஒருவர், திருவள்ளூர் நகராட்சியில் இரண்டு பேர், பூண்டி ஒன்றியத்தில் ஏழு பேர், ஆவடி நகராட்சியில் மூன்று பேர், பூந்தமல்லி நகராட்சியில் ஒருவர் என மொத்தம் 18 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 49 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனைகளில் 46 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details