திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் கூவம் நதிக் கரையோரம் 40க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்து வருகின்றன. இங்கு கூவம் நதிக்கரை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 32 வீடுகள் அகற்றப்பட்ட நிலையில் எட்டு வீடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் அந்த வீடுகளை அகற்ற கோரி நீதிமன்றம் உத்திரவிட்டது. இதனையடுத்து பூந்தமல்லி தாசில்தார் தலைமையில் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அலுவலர்கள் இன்று (ஜூன் 24) வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குடியிருப்புவாசிகள் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.