திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசித்து வருகின்றனர். நெசவுத் தொழிலை மட்டுமே நம்பி இவர்களது வாழ்க்கை நகர்ந்து வருகிறது.
இலவச வீட்டுமனை வழங்கக்கோரிய நெசவாளர்கள்:
கூலித் தொழிலாளிகளான இவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு குடிநீர் மாசு ஏற்படுவதாக கூறி பெரும்பாலான சாயப்பட்டறைகளை இழுத்து மூடியதால் நெசவுத் தொழிலில் ஈடுபட முடியாத நிலைவுள்ளது.
தற்போது கரோனா ஊரடங்கின் காரணமாக நெசவு தொழில் முற்றிலும் முடங்கியதால் உணவுக்கும், வீட்டு வாடகை தரவும் முடியாமல் அவதிக்குள்ளாகி வந்துள்ளனர். இந்நிலையில் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.