தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 24, 2019, 1:40 AM IST

ETV Bharat / state

செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் தேவை - பொதுப்பணித்துறை தகவல்

திருவள்ளூர்: கிருஷ்ணா நதியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் கிடைத்தால் மட்டுமே சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Sembarapakkam Lake

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கியமான ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் போதிய நீர்வரத்து இன்றி முற்றிலுமாக வரண்டு போயிருந்த நிலையில், கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக ஏரி காட்சியளித்தது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழையின் காரணமாகவும், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து கால்வாய் வழியாக தொடர்ந்து தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளதால் அதன் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் வெறும் 0.561 டிஎம்சி மட்டுமே இருப்பு உள்ளது.

அதன் மொத்த உயரம் 24 அடியில் தற்போது வெறும் 8. 7 அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 260 கனஅடி நீர், பூண்டிநீர் தேக்கத்தில் இருந்து கால்வாய் வழியாக வந்து கொண்டிருக்கிறது.

செம்பரபாகக்கம் ஏரி

குடிநீர் தேவைக்காக 29 கன அடி நீர் வினாடிக்கு வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து பருவமழை நீடித்தாலும் ஆந்திர மாநிலத்தில் இருந்து போதிய அளவு கிருஷ்ணா நதிநீர் கிடைக்கப் பெற்றாலும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி சென்னை மக்களின் குடிநீர் தேவையை தொடர்ந்து பூர்த்தி செய்யும் நிலை ஏற்படுமென பொதுப்பணித்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:

சென்னை ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்: காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details