திருவள்ளூர்: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் எத்திராஜுலு, பத்மபிரியா தம்பதி. இவர்களது மகன் விகாஷ் (26). சிவில் என்ஜினீயரான இவர் கரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்தே ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். வீட்டில் இருந்த போது சைக்கிளிங் நீண்ட தூரம் ஓட்டுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு ஏற்பட்டது. அதன்படி பூட்டான், கம்போடியா, இந்தோனேசியா வழியாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டார். அதன்படி நேற்று (நவ.25) தனது பயணத்தை விகாஷ் சென்னையில் தொடங்கினார். ஆந்திரா செல்வதற்காக திருவள்ளூர் மாவட்டம் வந்தார்.
அப்போது அவர் கூறுகையில், "சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்து இரண்டு ஆண்டுகளாக ஐடி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தேன். கரோனா தொற்றின்போது வீட்டில் இருந்தே வேலை செய்து வந்தேன். இந்தத் தருணத்தை பயன்படுத்திக் கொண்டு நீண்ட தூரம் சைக்கிள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி மேற்கொண்டேன்.