திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த புழலில் இருசக்கர வாகனங்களில் சென்ற நான்கு பேரிடம் அடுத்தடுத்து அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்து செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.
இதில் இருவரை மட்டும் பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இருவரிடமும் புழல் போலீசார் விசாரணை நடத்தியதில் சென்னையை சேர்ந்த தீனதயாளன், இம்ரான் என தெரியவந்தது.