திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவருபவர்கள், விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இங்குள்ள வார்டுகளில் பெண் நோயாளிகள், குழந்தைகள் என தனித்தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், மருத்துவமனை வளாகத்திற்கு பின்புறம் கஞ்சா போதையில் திளைக்கும் கும்பல் மருத்துவமனைக்குள் நுழைந்து பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுவருகிறது.
இது குறித்து நோயாளிகள் கூறுகையில், "நோயாளிகளுடன் பாதுகாப்புக்காக இருக்கும் பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளனர். அதன்பின், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.